Saturday 17 September 2011

எல்லோரும் காணவேண்டிய காணொளி

விகடன் வெளியிட்டிருக்கும் எம்மினத் தலைவன் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்,


விகடன் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள்,
நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.
ஆனாலும்,



01.மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

02.தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர்
. வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!


03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.

நன்றி விகடன்.

தமிழில் இராணுவக் கல்வி… உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவன் பிரபாகரன்...




அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் பிரபாகரன் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும்.


ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப் பற்றி
என்னவெல்லாம் பொய்யாக எடுத்துரைக்கப்பட்டதோ கற்பிக்கப்பட்டதோ
அத்தனையையும் எழுதிக் கிழி்த்தார்கள்.
இப்போது அவர்களே வெட்கித் தலைகுனியும் பல உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
குறிப்பாக, தமிழ் ஈழம் என்ற நாட்டின் கட்டமைப்பு வசதிகளை, ஒரு நாட்டின் தேசியத் தலைவர் என்ற பிரதான இடத்தில் அமர்ந்து அவர் செய்துள்ள சாதனைகள் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்கச் செய்கின்றன.
தமிழில் இராணுவக் கல்வி!
தாய்த் தமிழில் மருத்துவக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி கற்பது இன்னும்கூட தமிழகத்தில் சாத்தியமில்லாத நிலை. ஆனால் பிரபாகரனோ, புலிகளுக்கு சுத்தத் தமிழில் ராணுவக் கல்வியையே போதித்துள்ளார். ராணுவக் கல்வி என்றால், வெறும் வாய்மொழிக் கட்டளைகள்தானே என நினைக்க வேண்டாம். முழுமையான பாடத் திட்டங்களுடன் கூடிய பாரம்பரிய கல்வி அமைப்பையே தமிழ் ஈழத்தில் நடைமுறையில் வைத்துள்ளார் பிரபாகரன். இதனை இப்போது வெளிப்படுத்தியிருக்கும் சிங்கள ராணுவத்தினர், பிரபாகரனின் போர் வியூகங்கள், அதை புலிகளுக்கு கற்றுத் தர வகுத்துக் கொடுத்த முறைகள், பாசறைகள் போன்றவற்றைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறார்கள்.


இலங்கையில் முறையான, கட்டுக்கோப்பான ராணுவமாக 30 ஆண்டுகாலம் புலிகள் அமைப்பு எப்படி இயங்கியது என்ற ரகசியங்கள் இப்போதுதான் அவர்களுக்கு முழுமையாகத் தெரிய வந்துள்ளது.

ஒரு ராணுவத்திற்கு என்னென்ன தகுதிகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் இருக்க வேண்டுமோ அத்தனையையும் தனது படைக்குக் கற்றுக் கொடுத்துள்ளார் பிரபாகரன். வெறும் வாய் வழி உத்தரவுகளாக இல்லாமல், ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, முறைப்படி அனைத்தையும் செய்து தனது போராளிப் படையை ஒரு ராணுவமாக இயங்கச் செய்துள்ளார் பிரபாகரன் என்பது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரபாகரன் என்ற ஒரு தனி ஆட்சியாளரின் கீழ் இயங்கி வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிக்க, 20-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் கையேந்தி ராணுவப் பிச்சையெடுத்தது இலங்கை. இப்போது புலிகள் பகுதிகளில் தீவிர தேடுதலை நடத்தி அவர்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி பயன்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் புலிகளோ சுயமாக, யாருடைய உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த பலம், ஆயுதங்களை மட்டுமே நம்பி கடைசி வரை களத்தில் நின்றார்கள்.



இந்த தேடுதலின் போது, புலிகளின் ராணுவ ஆவணக் காப்பகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் உத்திகள், ராணுவத் திட்டங்கள், தாக்குதல் இலக்குகள் குறித்த தகவல்கள் அடங்கிய மிக முக்கிய ஆவணங்கள் இங்குதான் இருந்ததாக சிங்கள ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 272 பைல்களில் இந்த ஆவணங்கள் உள்ளன.

இவற்றை ராணுவத்தினர் கொழும்பு கொண்டு வந்து உயர் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இவற்றைப் பார்த்த ராணுவ உயர் அதிகாரிகள் அதிர்ந்து போய் விட்டனராம். காரணம், உலகில் எந்த ஒரு ராணுவத்திடமும் இவ்வளவு முழுமையான திட்டமிடல் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிக மிக அழகாக திட்டமிட்டு ஒவ்வொன்றையும் புலிகள் செய்து வந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகிறதாம்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் புதையல்களிலேயே மிக மிக முக்கியமானவை இந்த ஆவணங்கள்தான் என்கிறார்கள்.

பிரபாகரனுக்கு நெருங்கியவர் கொடுத்த தகவல்…

இந்த ஆவணங்கள் இருந்த இடம் குறித்த தகவலை, பிரபாகரனிடம் மிக நெருக்கமாக இருந்த ஒருவரிடமிருந்துதான் பெற்றுள்ளதாம் இலங்கை ராணுவம். அந்த முக்கிய நபர் யார் என்பதை இலங்கை ராணுவம் தெரிவிக்கவில்லை. அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த ஆவணப் புதையலைத் தோண்டி எடுத்துள்ளது ராணுவம்.


புலிகளின் சில முக்கியத் தலைவர்கள் இன்னும் ராணுவத்தின் பிடியில் விசாரணையில் இருப்பது நினைவிருக்கலாம்.

விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள், தற்கொலைப் படைத் தாக்குதல், ஆயுதக் கொள்முதல் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள், புலிகள் இயக்கத்தை மறு சீரமைக்க போடப்பட்டிருந்த திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் இந்த ஆவணங்களில் உள்ளது என்று போலீஸ் எஸ்.பி. வாஸ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர இலங்கையின் மொத்த ராணுவ அமைப்பை அப்படியே படம்பிடித்து வைத்தது போன்ற துல்லியமான விவரங்கள் அந்த ஆவணங்களில் உள்ளனவாம்.
இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டு தந்திருக்கிறார் பிரபாகரன். இதைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்களாம் சிங்களத்து உயர் அதிகாரிகள்.


வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் விடுதலைப் புலிகள் நிபுணத்துவம் பெற்றிருந்தது அந்தக் கோப்புகளில் தெரிய வந்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து அவற்றை பிரபாகரனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்துள்ளனர்.

பிரபாகரன் அவற்றைக் கொண்டுதான் எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.


கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ஏராளமாய் உள்ளன. அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இவற்றில் உள்ளன.



கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ஏராளமாய் உள்ளன. அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இவற்றில் உள்ளன.

வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட நாடுகளின் பட்டியலும், அவை ஈழத்திற்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக எழுதப்பட்டிருந்தன.

இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு, அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120 மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட புலிகளின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் தயாரிப்பு:
 
தமிழீழத்தின் அனைத்து ஆயுதத் தேவைகளுக்கும் வெளிநாடுகளை மட்டுமே நம்பி இருக்காமல், சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர் புலிகள்.


இதற்காக புலிகள் பல ஆயுத தயாரிப்புக் கூடங்களை நிறுவியுள்ளனர். இன்னொரு பக்கம் கடல்புலிகள் கலக்கியுள்ளனர். மோட்டார் படகுகள், நீர்மூழ்கிகள் போன்றவற்றை அவர்களே கட்டியுள்ளனர். சிறு விசைப்படகு மோட்டார்களையும் புலிகளே தயாரித்துள்ளனர். இந்த திறன் இலங்கை ராணுவத்துக்குக் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது எப்படி என்று ஏற்கெனவே பல தகவல்கள் வெளிவந்துவிட்டன. விமானங்களின் உதிரி பாகங்களை மட்டும் வாங்கிக் கொண்டு, மற்ற அனைத்தும் தங்கள் சொந்த முயற்சியிலேயே புலிகள் செய்துமுடித்துள்ளனர்.

தமிழ் மாதங்களும், பருவ காலங்களும்

தமிழ் மாதங்களும், பருவ காலங்களும்,

இளவேனிற் காலம் - சித்திரை , வைகாசி
முதுவேனிற் காலம் - ஆனி, ஆடி
கார் காலம் -ஆவணி, புரட்டாசி
குளிர் காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக் காலம்- மார்கழி, தை
 பின்பனிக் காலம்- மாசி, பங்குனி .

Thursday 15 September 2011

எங்களுக்குத் தெரிஞ்சதுலாம் உழைப்புதான்.



குருவே வணக்கம். எனக்கு ஒரு பிரச்னை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

“அதனாலென்ன? நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே’ என்றார் குரு.

“என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே’என்று சொன்னவனுக்கு குரு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.


“ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளைக் கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன.

டிரைவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றபதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அந்த சர்தார்ஜி டிரைவர் ஒரு வார்த்தைகூடபேசவில்லை. பல மணி நேரம் சுற்றிவிட்டு அவர்கள் இறங்கும் இடம் வந்தது. அதற்குள் ஏகப்பட்ட கிண்டல் அடித்தவிட்டனர். இளைஞர்கள்.


மீட்டரைப் பார்த்து காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி டிரைவர், அந்த இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, “தம்பி, எங்க சர்தார்ஜிகளை நிறைய கிண்டலடிச்சிங்க பரவாயில்லை. எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க.


இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பாக்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்கு போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்’ என்று சொல்லி போய்விட்டார்.


இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு அவர்கள் போன இடமெல்லாம் பார்த்தார்கள். ஒரு இடத்தில் கூட பிச்சைக்கார சர்தார்ஜியை பார்க்க முடியவில்லை.


அவர்கள் டெல்லியைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. ரயில் நிலைய வாசலில் அந்த சர்தார்ஜி டிரைவரை சந்தித்தனர். அப்போது அவர் கேட்டார், “என்ன தம்பி, அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்கு பிச்சை போட்டிங்களா’ என்று. இளைஞர்கள் “இல்லை’யென்று தலையசைத்தார்கள்.


“அதான் தம்பி சர்தார்ஜி. உலகம் முழுக்க எங்களை வச்சு ஜோக்கடிக்கிறாங்க. கேலி பண்றாங்க. ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்துறதில்ல. எங்களுக்குத் தெரிஞ்சதுலாம் உழைப்புதான். ரோட்டுக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம் ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம்.

டெல்லில நீங்க ஒரு பிச்சைக்கார சர்தார்ஜியைக் கூட பார்க்க முடியாது.’ என்று அந்த சர்தார்ஜி டிரைவர் சொன்னபோது இளைஞர்கள் கண்களில் பிரமிப்பு.’


இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது.


அப்போது குரு அவனுக்குச் சொன்ன மொழி:

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி


Eeramana Rojavae (1991) - Vaa Vaa Anbe

TAMIL MELODY SONG ATHO MEGA OORVALAM(EERAMAANA ROJAVE MOVIE)SIVA MOHINI....

O Maname song Ullam Ketkume

Wednesday 7 September 2011

தமிழகத்திலும், கேரளாவிலும், ஆந்திராவிலும் பிரசாரம் செய்து காங்கிரஸை காலி செய்வேன்- சீமான்

Seeman
ஆற்காடு: இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப்போகிறது. பாதி இந்தியாவை உனக்கு எந்த ஒரு சீட்டும் கிடைக்காமல் அன்னா ஹசாரே காலி பண்ணிவிடுவார். தென் இந்தியா காங்கிரஸ் கட்சியை நான் காலி சென்று விடுவேன். கேரளாவில் போய் என் நண்பர்கள் மூலம் என்னுடைய மொழியை பெயர்க்க வைத்து உன் வண்டவாளங்களை எடுத்துச் சொல்வேன். ஆந்திரா சென்று என் அண்ணி நடிகை ரோஜா மூலம் தகவலை மொழிபெயர்த்து அங்கே உனக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்துவிடுவேன். நாங்கள் இருக்கும் வரை நீ ஆட்சிக்கு வர முடியாது என்றார் சீமான்.

ஆற்காட்டில் நேற்று இரவு நடந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நாம் தமிழர் தலைவர் சீமான் பேசினார். அவரது பேச்சு:

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் இவர்களின் விடுதலையே தமிழினத்தின் விடுதலை. அதற்காகத்தான் போராடுகிறோம். இவர்கள் விடுதலை அடைந்தால் ஈழத் தமிழினமே விடுதலை அடைந்ததாக அர்த்தம். இவர்களுக்கான போராட்டத்தில் நாம் எப்போதும் உள்ளோம்.

கடந்த ஆட்சிகளில் ஒன்றரை ஆண்டுகளில் ஐந்து முறை என்னை கைது செய்தார்கள். சட்டத்தை மதிப்பவன் நான். ஆகையால் கைதுக்கு பயப்படாமல் கைதானேன். போலீசார் அழைத்துச் சென்ற இடத்திற்கெல்லாம் சென்றேன். நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டேன். கருணாநிதியைப் போல கைதுக்கு பயந்து நான் ஒருமுறைக் கூட கத்தியதில்லை. நடித்ததில்லை. இப்போதும் கூட என்னை கைது செய்தார்கள். நான் கைதானேன். நடைப் பயணத்தை நிறுத்துங்கள் என்றார்கள். சட்டத்தை மதிப்பவன் நான். அதனால் தான் காவல்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க போராட்டத்தை கைவிட்டோம்.

ஆனால் லட்சியத்தையோ, நோக்கத்தையோ கைவிடவில்லை. ஈழத்தில் சுதுமனத்தில் தலைவர் பிரபாகரன் ஒரு பிரகடனம் செய்தார். நம் தொப்புள் கொடி உறவான தமிழர்கள் வாழும் நமது இந்தியா, நம் நலனை காக்கும் இந்தியா நம்மை ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்கிறது. நாம் அவர்களிடம் ஆயுதங்களை மட்டுமே ஒப்படைக்கிறோம். லட்சியத்தை ஒருபோதும் கைவிடவில்லை.

அதைப்போலத் தான் இன்று போராட்டத்தை கைவிட்டுள்ளோம். அதற்கு மற்றொரு காரணம் நமது முதல்வர் அம்மா, நமது தம்பிமார்கள் 3 பேரை விடுதலை செய்வார் என்ற நம்பிக்கைத்தான். அவர்களை நாம் நம்புவோம். அவர் சட்டமன்றத்தில் மூன்று பேரை காக்க தீர்மானம் கொண்டு வரும் முன்பு எத்தனை அழுத்தம், எதிர்ப்புகளை சந்தித்தார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

மற்றவர்கள் பேசியதை விட அம்மா செய்து காட்டினார். இவர்களை காப்பாற்ற ரயில் மறியல், ஆளுநர் மாளிகை முற்றுகை, ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் செய்தோம். நம்மை அவர் கைது செய்யவில்லை. நசுக்க முற்படவில்லை. நம்மை அழிக்க முற்படவில்லை. நம்மை மதித்தார்.

இதையெல்லாம் மத்திய அரசு, தமிழக அரசை அம்மாவின் பெயரை கெடுக்க வேண்டும் என முடிவு செய்தது. ராஜபக்சே மீது போர்க்குற்றம சுமத்தி பொருளாதார தடை விதிக்க வேண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை மத்திய அரசு விரும்பவில்லை.

அம்மாவுக்கு உலக தமிழர் மத்தியில் அம்மாவுக்கு ஏற்பட்ட நற்பெயரை கெடுக்க, புகழை கெடுக்க மத்திய காங்கிரஸ் அரசு இந்த மூன்று பேரை தூக்கிலிட்டு முதல் அமைச்சர் அம்மாவை புகழை கெடுக்க முடிவு செய்தது. உடனே இதை தடுக்க கருணாநிதி ஆலோசனை சொல்கிறார். இவர் என்ன அம்மாவுக்கு அரசியல் ஆலோசகரா. 6 மாதத்திற்கு முன்பு நீர் தானே ஆட்சி புரிந்தீர். காப்பாற்ற வேண்டியதுதானே, காப்பாற்றும் எண்ணம் உனக்கு இல்லை. இப்ப நீ ஏன் துள்ளுரன்னு எங்களுக்கு தெரியும்.

இந்த அரசு தமிழனுக்காக ஆளும் அரசாக உள்ளது. வரும் உள்ளாசித் தேர்தலில், அதற்கு அடுத்து வரும் எம்பி தேர்தலில் காங்கிரஸ்காரர்களையும், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருபவர்களையும் ஒரு இடத்தில் கூட ஜெயக்க விடமாட்டேன்.

ஒருத்தன் டெல்லியில் இருந்து, தமிழ்நாட்டு தீர்மானம் எங்களை கட்டுப்படுத்தாது என்கிறான். அப்படி என்றால் உன் முடிவும் எங்களை கட்டுப்படுத்தாது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப்போகிறது. பாதி இந்தியாவை உனக்கு எந்த ஒரு சீட்டும் கிடைக்காமல் அன்னா ஹசாரே காலி பண்ணிவிடுவார். தென் இந்தியா காங்கிரஸ் கட்சியை நான் காலி சென்றுவிடுவேன். கேரளாவில் போய் என் நண்பர்கள் மூலம் என்னுடைய மொழியை பெயர்க்க வைத்து உண்வண்டவாளங்களை எடுத்துச் சொல்வேன். ஆந்திரா சென்று என் அண்ணி நடிகை ரோஜா மூலம் தகவலை மொழிபெயர்த்து அங்கே உனக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்துவிடுவேன். நாங்கள் இருக்கும் வரை நீ ஆட்சிக்கு வர முடியாது.

இந்தியாவை ஆளப்போவதை யார் என்பதை எங்கள் முதல்வர் அம்மா தான் தீர்மானிக்கப்போகிறார். அம்மாவே நீங்கள் கவலைப்படாதீர்கள். தென்னிந்தியா முழுவதும் சுற்றி வெற்றிக் கனியை பறித்து வந்து உங்கள் காலடியில் நான், என் தம்பி மார்களும் சமர்ப்பிக்கிறோம்.

இந்த மூவரின் விடுதலை அம்மா கையில் தான் உள்ளது. நமது அன்னை அற்புதம்மாளின் கண்ணீரை முதல்வர் அம்மாதான் துடைக்க வேண்டும் என்று பேசினேன். அவர் ஒரு கண்ணீரில் விழுந்த நீரை துடைத்துவிட்டார். இன்னொரு கண்ணின் நீரையும் அம்மா துடைப்பார் என நம்புகிறேன். நீங்களும் நம்புங்கள் என்றார் சீமான்.

Friday 2 September 2011

செய் செய்யாதே!

செய் செய்யாதே!

செய் செய்யாதே!
''சத்குரு, நான் என் இளமைக் காலத்தில் வெளியில் சொல்ல முடியாத சில தவறுகளைச் செய்திருக்கிறேன். நெருக்கமானவர்களிடம்கூடப் பல பொய்களைச் சொல்லி ஏமாற்றியிருக்கிறேன். இப்போது, உடல் ஓய்ந்துவிட்டது. என்னைப்பற்றி முழுமையாகத் தெரியாத என் குடும்பத்தார் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் மரியாதையும் என்னை உறுத்துகின்றன. எவ்வளவுதான் முயன்றாலும், இறந்த காலத்தில் செய்த பிழைகள், தவறுகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து தாங்க முடியாத வருத்தத்தில் தள்ளுகின்றன. இதிலிருந்து மீள வழி இல்லையா?''
''சிறு வயதில் செய்ய முடிந்ததை எல்லாம் இப்போது செய்ய முடியவில்லையே என்று வருத்தம் வந்துவிடவில்லையே உங்களுக்கு?
வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயம் முக்கியமாகத் தோன்றுகிறது. அதற்கு முன்னுரிமை கொடுக்கும்போது, மற்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில்கூட ஈடுபடத் தோன்றுகிறது. யாரோ ஒருவரைக் கொலை செய்யும் ஒருவன்கூட அந்தக் கணத்தில் அதுதான் சரியான செயல் என்று கருதுவதால்தான் அப்படிச் செய்கிறான்.
கோயிலுக்கு அழைத்துச் சென்று அப்பா மகனிடம் சொன்னார், 'கடவுளிடம் பிரார்த்தனை செய்து, உனக்கு வேண்டியதைக் கேள். கொடுப்பார்.'
'நீங்கள் பிரார்த்தனை செய்து கேட்டால், அதையும் உங்களுக்குக் கொடுப்பாரா அப்பா?'
'ஆம், மகனே. நிச்சயமாக!'
மகன் இப்போது அப்பாவைச் சந்தேகத்துடன் பார்த்தான். 'அதெப்படி அப்பா நடக்கும்? நம் இரண்டு பேரில் யார் பேச்சை அவர் கேட்பார்?'
உலகம் அப்படித்தான். ஒரு விஷயத்தை இருவர் ஒரே மாதிரி பார்ப்பது இல்லை. தவறு என்று மற்றவர்கள் கருதியது அந்தக் கணத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சந்தோஷம் கொடுத்திருக்கிறது. அதனால், அந்தச் செயலில் ஈடுபட்டீர்கள். எப்போது தவறு என்று மனதார உணர்ந்துவிட்டீர்களோ, அதை மறுபடி செய்ய மாட்டீர்கள்.
ஆனால், நினைவுகள் சுமையாகத் தங்கி அவதிக்கு உள்ளாக்குகின்றன. நரகத்துக்குப் போய்விடுவோமோ, அல்லது வேறு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று இப்போது பயம் வந்துவிட்டது. இந்தப் பயம், குற்ற உணர்வு இதெல்லாம் மனதின் செயல்.
நமக்கு ஏற்கெனவே நடந்தது எல்லாம் ஞாபகங்களாகத் தங்கிவிடுகின்றன. அந்த ஞாபகங்கள் மீது கட்டப்படும் கற்பனைதான் எதிர்பார்ப்பாக, குற்ற உணர்வாக, அச்சமாக எழுகிறது. கற்பனை என்று புதிதாக ஒன்றும் வரப்போவது இல்லை. நம் அனுபவத்தில் உள்ளதை அடிப்படையாகக்கொண்டு, ஏற்கெனவே உள்ள ஞாபகங்களைச் சற்று மிகைப்படுத்தினால், அதுதான் கற்பனை.
ஒரு சின்னப் பையன் தன் அம்மாவிடம் ஓடி வந்தான்.
'அம்மா, நான் நீச்சலடிக்க ஆற்றுக்குப் போகலாமா?'
'ஐயோ, அங்கே எல்லாம் போகாதே... ஆற்றில் பெரிய பெரிய முதலைகள் இருக்கும். உன்னை இழுத்துப் போய்விடும்' என்றாள் அம்மா.
பையனுக்கு ஆச்சர்யம், 'ஆனால், தினமும் அப்பா அங்கே போய் நீச்சல் அடிக்கிறாரே... அம்மா?' என்றான்.
'டேய்! உங்கப்பா பெரிய தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கார். அவர் போகலாம்... நீ போகக் கூடாது!'
அந்த அம்மாவுக்கு கணவனைப்பற்றிய ஞாபகம், மகனைப்பற்றிய கற்பனை... இரண்டும் எப்படி இருக்கிறது பாருங்கள். நிறையப் பேர் என்னிடம் தங்கள் குழந்தையைக் கூட்டி வந்து நிறுத்துவார்கள், 'சத்குரு, இவனுக்கு ஞாபகசக்தி கம்மியாக இருக்கிறது. அதை அதிகப்படுத்திக் கொடுங்கள்' என்பார்கள்.
'பழசெல்லாம் ஞாபகம் இருப்பதால்தானே நீங்கள் இப்படிக் கஷ்டப்படுகிறீர்கள்? எல்லாம் மறந்துபோனால் நல்லதுதானே? நேற்று பள்ளிக்கூடத்தில் நடந்தது ஒன்றும் ஞாபகம் இல்லாமல் உங்கள் பையன் ஆனந்தமாகத்தானே இருக்கிறான்?' என்று வேடிக்கையாகச் சொல்வேன்.
உங்கள் தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தை, தொழில் எதுவானாலும், உங்களுடைய ஞாபகசக்தி காரணமாகத்தானே அடையாளம் காண முடிகிறது? அதே போல், உங்கள் சாதி, மதம், அந்தஸ்து எல்லாமே ஞாபகப் பதிவுகள்தானே?
ஞாபக சக்தியும், கற்பனையும் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை மனதின் மிக அடிநிலையில் உள்ள சக்தி. அந்த நிலையிலேயே மனதைப் பயன்படுத்தினால், இறந்த காலம் என்பது நம் வாழ்க்கையின் நிகழ்காலமாகிவிடும்.
கடற்கரையில் இருக்கிறீர்கள். சிலுசிலுவென்று காற்று பிரமாதமாக வீசுகிறது. ஆனால், அதை அனுபவிக்காமல், பத்து நாட்களுக்கு முன்னால் நடந்த அசம்பாவிதம்பற்றியே புத்தி சிந்தனை செய்கிறது. இந்தக் கணத்தின் சுகம் கிடைக்காமல் போகிறது. பழைய வேதனையை அதற்கான சூழ்நிலை இல்லாதபோதிலும், மறுபடி அனுபவிக்கிறீர்கள்.
ஜப்பானில் இருந்து வருபவர்களிடம் ஒரு விசித்திர நோய் இருக்கும். ஒரு வீட்டில் இருந்து நான்கு பேர் சுற்றுலா வந்தால், நான்கு பேரிடமும் தனித் தனி கேமரா இருக்கும். மலையை, நதியை, சூரிய உதயத்தை, அஸ்தமனத்தை எதையும் நேரடியாக அனுபவிக்காமல், கேமரா வழியே கவனிப்பதிலேயே நேரம் செலவு செய்வார்கள்.
துருக்கி சென்றிருந்தேன். அங்கே வெப்பக் காற்றை நிரப்பிய பலூன்களில் மேலே பறக்கையில், அதை ஆழ்ந்து அனுபவிக்காமல், நான்கைந்து ஜப்பானியர்கள் கேமரா வழியே படம் எடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கண்கள் இப்படிச் சிறைபட்டுப் போனதில், அதில் ஒருவர் தவறாக நகர்ந்து, கிட்டத்தட்ட முப்பதடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். தோள்பட்டையில் எலும்பு முறிவோடு அவரைத் தூக்கிப் போனார்கள். தலத்தில் அனுபவிப்பதை விடுத்து, வீட்டில் போய் நினைத்துச் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
உருவத்தை, ஒலியை, நிகழ்வை எல்லாவற்றையும் இன்னும் துல்லியமாகப் பதிவு செய்யக் கருவிகளே வந்துவிட்டன. அதற்கு எதற்கு உங்கள் மனதை வருத்துகிறீர்கள்?
உலகத்தில் பொதுவான பிரச்னையாக இருப்பதே, இந்த மனதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல் இருப்பதுதான். இறந்த காலத்தை நினைத்தபடி, உயிர் இல்லாத ஒன்றுக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்தால், உயிரோடு இருப்பதுகூட உயிர் அற்றதாகிவிடும்.
இப்படி மனதை மிக மிக அடிநிலையிலேயே உபயோகப்படுத்தி வராமல், நினைவாற்றல், கற்பனை இரண்டையும் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு மனதைப் பயன்படுத்தினீர்கள் என்றால், அது எப்பேர்ப்பட்ட கூர்மையான கருவி என்று உணர்வீர்கள். உங்கள் அனுபவத்தில் இல்லாத பரிமாணங்கள்கூட உங்கள் அனுபவத்தில் வந்து சேரும். அதற்காகத்தான் தியானம் என்று கொண்டுவந்தார்கள்.
உண்மையில், எந்தக் கணத்திலும் ஆனந்தமாக இருப்பது எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது இல்லையா? உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம்தான் முக்கியம் என்று நினைத்தால், அதுபற்றி மட்டுமே உங்கள் மனம் செயல்படட்டும்!''
சத்குருவின் 'ஜென்'னல்!
குரு சீடனை அழைத்தார். ''எனக்கு வயதாகி விட்டது. எனது வாரிசாக உன்னை அறிவிக்கிறேன். அதற்கு அடையாளமாக இந்தப் புத்தகத்தை உன்னிடம் கொடுக்கிறேன்'' என்றார்.
''குருவே, உங்களிடமிருந்து இதுவரை பெற்றவையே எனக்குப் போதும். புத்தகம் தேவையில்லை.''
''மறுக்காதே. தலைமுறை, தலைமுறையாக குரு தன் வாரிசாகக் கருதும் சீடனுக்கு வழங்கும் புனிதப் புத்தகம் இது.''
குரு வற்புறுத்தியதால், சீடன் புத்தகத்தை அவரிடம் இருந்து வாங்கினான். நெருப்பில் எறிந்தான்.
சத்குருவின் விளக்கம்:
ஆன்மிகத்தின் அடிப்படை இந்த உயிர் பற்றியது. இதைப்பற்றி கடவுளே சொன்னது என்று நீங்கள் நம்பக் கூடியதானாலும், அந்தப் புத்தகத்தைப் படித்து, உயிர்பற்றி உணர்ந்துவிட முடியாது.
விகடனில் இதைச் சொல்கிறேனே, இதையே ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகப் புரிந்துகொள்வார்கள். ஆயிரம் விதமான தத்துவங்களை உருவாக்கிக் கொள்வார்கள். எதைக் கொடுத்தாலும், அதை அதன் போக்குக்கு ஏற்றவாறு சிதைத்துப் புரிந்துகொள்ளும் தன்மை, மனிதனின் மனதில் மேலோங்கியிருக்கிறது. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொன்று சொல்லிச் சொல்லி மனிதனின் மனதில் எல்லாவிதக் குழப்பமும் வந்துவிட்டது.
புத்தகம் படிப்பது ஒரு உத்வேகத்துக்காகத்தான். யாரோ ஒரு மகான்பற்றி, அவர் வாழ்ந்த வாழ்க்கை பற்றி, அவர் எப்படி எல்லாம் இருந்தார் என்பதுபற்றிப் படிக்கையில் நம் வாழ்க்கையும் அப்படி அமைய வேண்டும் என்று நமக்கு ஓர் ஊக்கம் வரலாம். ஆன்மிகப் பாதையில் பயணம் செய்ய உத்வேகம் வரலாம். மற்றபடி, புத்தகம் மூலமாகச் சொல்லிக் கொடுக்கும் தன்மையல்ல, ஆன்மிகம்.
படைத்தவனே உருவாக்கிய புத்தகம் நீங்கள். அதைப் புரிந்துகொள்ளாமல், வேறு ஏதோ புத்தகத்தை எதற்காக நாடிப் போக வேண்டும்?
சிஷ்யனுக்குப் புரிந்தது அந்த குருவுக்குப் புரியவில்லை.
ஆன்மிகம் தொடர்பான எல்லாப் புத்தகங்களையும் அந்தச் சீடனைப் போல் எரித்துவிட்டால், தேவைஅற்ற போதனைகள் குழப்பாது. உயிரை உணர்வதற்கு எந்தப் பிரச்னையும் இருக்காது!